உள்ளாடைகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலிறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கடந்த 27 நாட்களாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.

இவ்வாறான நிலையில், இன்றையதினம் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளைத் தொங்கவிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன் பதற்றமான நிலை தோன்றியது.

இதனையடுத்து மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *