நல்லூர் கோவில் குறித்து அண்ணாமலை புகழாரம்

யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் பார்வையிட்டிருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனிஒரு அறங்காவலரால் நடத்தப்படுகிறது.

அங்கிருந்த அர்ச்சகர்கள் தட்டில் காசு கொடுத்தாலும் வாங்குவதில்லை.  அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டும்தான்.  உண்டியலில் மட்டும் தான் பணம் போட முடியும்.

VIP அல்லது Non VIP என்று எதுவும் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை தான்.  தமிழகத்திலும் அப்படி ஒரு சட்டம் கொண்டு வர முடியுமா?“ என கேள்வி எழுப்பியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *