எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு: காஞ்சன விஜேசேகர

கொழும்பு,மே 05

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்தை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

எதிர்வரும் நாட்களில் லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணைந்து எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *