முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் இன்று (05) நாடு பூராகவும் நடைபெற்றன.
கிண்ணியா மத்திய கல்லூரியின் முதலாந்தர மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா கல்லூரியின் அதிபர் அனீபா தலைமையில் இன்று (05) இடம் பெற்றது.
கல்லூரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் ஆசிரியர் வள நிலைய பொறுப்பதிகாரி நாம்தீன் கலந்து சிறப்பித்தார்.
இதில் ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா அல் புர்க்கான் வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்கள் வரவேற்பு.
கிண்ணியா – சின்னம் பிள்ளை சேனை கிராமத்தில் உள்ள கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட அல் புர்க்கான் வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் பாரிஸ் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் இரண்டாம் தர மாணவர்கள் இன்று (05) புதிதாக முதலாம் தரத்துக்கு வருகை தந்த 16 மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றுக் கொண்டதுடன், வருகை தந்த விருந்தினர்களால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப தவிசாளர் முகம்மட் நௌபர், அல் புர்க்கான் வித்தியாலயத்தின் கிண்ணியா வலயத்துக்கான இணைப்பாளர் ஆசிரியர் றிஸ்வி, பிரதி அதிபர் இம்தியாஸ், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
மருதமுனை ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் முதலாம் தர மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு இன்றைய தினம் சுமூகமாக நடைபெற்றன.
மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் எம்.எல். முஹம்மட் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கே. ஜெயந்திமாலா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் கலந்து கொண்டார்.
தரம் இரண்டு மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
முதல் நாளான இன்றைய தினம் தரம் ஒன்று மாணவர்கள் அவர்களுடைய முதல் எழுத்தை அட்டைகளில் எழுதி காட்சிப்படுத்தினார்.
இதனை அடுத்து பாடசாலையில் இணைந்து கொண்ட சகல புதிய மானவர்களுக்கும் புத்தகப் பை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஷம்ஸ் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அபிமானிகள், பெற்றோர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




