கொரோனா தொற்றால் 79பேர் பலி..!

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று தொற்றால் பாதிக்கப்பட்ட 79 பேர் உயிரிழந்தனர் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தோரில் 41 ஆண்களும், 38 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *