பிர­சாத் பெனான்டோ மற்­றும் சம்­ப­வத்­தோடு தொடர்­பு­டைய பொலி­ஸா­ருக்கு எதி­ராக நட­வடிக்­கை!

யாழ்.பொலி­ஸாரே தவ­றி­ழைத்­த­னர் கஜேந்­தி­ர­கு­மார் தெரி­விப்பு!

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் சுகா­தார விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றியே நினை­வஞ்­சலி செய்­ய ­முற்­பட்­டார். பொலி­ஸா­ருக்­ வெ­ளி­யைக்­கூட அவர் பின்­பற்­றி­யி­ருந்­தார். ஆனால், பொலி­ஸாரே தனி­மைப்­ப­டுத்­தல் விதி­களை மீறிச் செயற்­பட்­ட­னர். இவ்­வாறு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தார்.

நல்­லூ­ரில் தியாகதீபம் திலீ­பன் நினை­வி­டத்­தில், அஞ்­சலி செலுத்த முயன்­ற­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜேந்­தி­ரன் கைது செய்­யப்­பட்­டமை தொடர்­பில் நேற்று அவர் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில்,
திலீ­ப­னின் நினை­வுத் தூபிக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜேந்­தி­ரன் தனி­யா­கத்­தான் சென்­றார். மக்­களை அணி­தி­ரட்­ட­வில்லை. வரு­டாந்­தம் குடும்­பத்­தோடு அமை­தி­யாக அஞ்­சலி செலுத்­து­வார். அது­போல இந்­த­மு­றை­யும் சில நாள்­க­ளாக அஞ்­சலி செலுத்­தி­வந்­தார்.

ஆனால் அஞ்­சலி செலுத்­து­வ­தைப் பொலி­ஸார் தடுத்­த­னர். எதற்­காக தடுக்­கி­றீர்­கள்? நீதி­மன்­றத் தடை உத்­த­ரவு உள்­ளதா? என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜேந்­தி­ரன், பொலி­ஸா­ரி­டம் வின­வி­னார். எனி­னும், தடை­செய்­யப்­பட்ட அமைப்­பின் உறுப்­பி­னரை நினை­வேந்த முடி­யாது என்­று­கூ­றியே அந்த இடத்­தில் கஜேந்­தி­ரனை பொலி­ஸார் கைது­செய்­த­னர். எனி­னும் கஜேந்­தி­ரன் கைது­செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­ப­டும் நேரத்­தில் “நினை­வு­கூ­ரு­வது தவறு என நாங்­கள் வழக்­குத் தாக்­கல் செய்­ய­வில்லை, கொரோனா தனி­மைப்­ப­டுத்­தல் சட்­டத்தை மீறி­ய­தாலே கைது செய்­தோம்” என பொலி­ஸார் கூறி­னர்.

அது­மட்­டு­மன்றி, அரா­ஜ­க­மாக கஜேந்­தி­ர­னின் உடலை பிடித்து, காலால் தட்டி கல­வ­ரம் போன்ற நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­னர். அவர் கைதுசெய்­யப்­பட்­டதை அறிந்து அந்த இடத்­துக்­குச் சென்ற எமது கட்­சி­யின் இரு பெண் உறுப்­பி­னர்­கள் பொலி­ஸா­ரால் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கையா­ளப்­பட்­ட­னர்.
இந்த விட­யத்­தில், யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி பிர­சாத் பெனான்டோ மற்­றும் நேற்­றைய சம்­ப­வத்­தோடு தொடர்­பு­டைய ஏனைய பொலி­ஸா­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­க­மாட்­டோம்.

27 ஆம் திகதி பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­களை பொறுத்து எமது நட­வ­டிக்­கை­கள் தொட­ரும். இது தொடர்­பில் அடிப்­படை மனித உரி­மை­கள் மீறல் சம்­பந்­த­மாக வழக்­குத்­தாக்­கல் செய்­வது தொடர்­பி­லும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளோம்.
சபா­நா­ய­க­ருக்­குத் தெரி­யா­மல் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். கஜேந்­தி­ர­னின் சிறப்­பு­ரிமை தொடர்­பில் நாடா­ளு­மன்­றில் கேள்வி எழுப்­ப­வுள்­ளோம். சட்­ட­ரீ­தி­யான ஆலோ­ச­னை­க­ளை­யும் பெற­வுள்­ளோம். – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *