வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து மோடி ஆலோசனை!

நாட்டில் நிலவும் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை சரியான நேரத்தில் கண்டறியவும்,  தீயை கட்டுப்படுத்துவதை விரைவுபடுத்தவும் வன ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *