ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு நியமனம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பல உள்ளூர் பத்திரிகைகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, துணைப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு உதவியாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் குழுக்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜெயலத் உட்பட 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக பத்திரிகைகள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *