வடக்கில் இதுவரையான கொரோனா பாதிப்பு விபரம்

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் நேற்று 24ஆம் திகதி வரை 8 ஆயிரத்து 401 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும், மன்னாரில் 10 தொற்றாளர்களும் மற்றும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 719 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 634 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 228 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *