அமைச்சர் தயாசிறி ஜயசேகர விபத்துக்கு உள்ளானார்

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வீதி விபத்தில் காயமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் (21) தனது அன்றாட பயிற்சிக்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, சென்ட் பிரிட்ஜெட் கொன்வென்ட் அருகே நடைபெற்ற இவ்விபத்தில் அமைச்சர் தயாசிறிக்கு நெற்றி, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *