பால் பவுடர், கோதுமை மாவு, சிமெண்ட் மற்றும் எரிவாயு விலை உயர்வு

பால் பவுடர், கோதுமை மாவு, சிமெண்ட் மற்றும் எரிவாயு விலையை உயர்த்துவதற்கான வாழ்க்கைச் செலவுக் குழுவின் பரிந்துரை குறித்து அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இருப்பினும், வாழ்க்கைச் செலவுக் குழு அரிசி மற்றும் குழந்தை பால் பவுடரின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால் பவுடர் 200 ரூபாயும், ஒரு கிலோ கோதுமை மாவு 10 ரூபாயும், ஒரு சிமெண்ட் பை 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ .200 விலை உயர்வின் கீழ் பால் மாவை சந்தைக்கு வழங்க முடியாது என்று இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்துகின்றது.

வாழ்க்கைச் செலவுக் குழுவும் எரிவாயுவின் விலையை ரூ .550 அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வெளியிடுமாறு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களுக்கு துரிதமாக விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *