
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 38 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




