பத்ரமுல்லவில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த இடத்தில் “ஹொரு கோ கம” என்ற வாசக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

பல்கலைகழக மாணவர் சம்மேளனம் நேற்று நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியது. மேலும் நேற்று காலை முதல் நாடாளுமன்றத்திற்கான பல பிரவேச வீதிகளையும் பொலிஸார் மூடினர்.

காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் நிறைவடைந்துள்ளன. நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *