போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – நாடாளுமன்றத்திலும் பதற்றமான சூழ்நிலை!

நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அவை 10 நிமிடங்களுக்கு சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இனியும் தாமதிக்காமல் எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சியான SJB சபாநாயகரிடம் வலியுறுத்தியதாக

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்தி வந்ததும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேடையில் ஏறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் நுழைவாயிலை மறித்து பாதுகாப்பிற்காக இரண்டு பேருந்துகளை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *