
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய ஆட்சேபனைக்கு மத்தியில், சபாநாயகரால் நாடாளுமன்றம் மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றவியல் பிரேரணை என்பன எதிர்க்கட்சியால் பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான சபை அமர்வுகளில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதுடன் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சியால் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை .
இவ்வாறான நிலையில் இன்றைய சபை அமர்வின் போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஆளும் தரப்பிற்கும் எதிர் தரப்புக்கம் இடையே பிரேரணை தொடர்பில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்: