ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

கொழும்பு, மே 06

கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் எதிர்வரும் செப்டம்பர் 10-ம் திகதி முதல் 25-ம் திகதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சபை இன்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *