இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி விலகல்!

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். எனினும், ஜனாதிபதி பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *