
சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் 4 மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறைக் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கடற்படையால் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து படகு, 8 டெனெட்டர், மருந்து நிரப்பப்பட்ட 6 குழாய்கள், 2 டெனெட்டர் குச்சி என்பன கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.