சபாநாயகரின் அறைக்கு சென்று கோரிக்கையை முன்வைத்த ஐ.ம.ச

கொழும்பு,மே 06

நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது குறித்தும் அவர்கள் இதன்போது முறைப்பாடளித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *