அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை முதல் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாராளுமன்ற அமர்வு 17ம் திகதி ஆரம்பமாகும் வேளை மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தை இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்த மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

