மகிந்தவின் பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்

தான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் தனது பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் மகிந்த ராஜபக்ச இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலை காரணமாக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக தற்போதைய அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் பிரதமரின் பதவி விலகல் குறித்து பல தரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அழுத்தங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் அந்த தரப்பினரிடத்தில் ஆட்சியைக் கையளிக்க தயார் எனவும் பிரதமர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *