
கொழும்பு,மே 06
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.