அவசரகால சட்டத்தை மீளப்பெற வேண்டும்-சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை.

ஜனாதிபதியால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில்,

அவசர கால சட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வேலைநிறுத்தம் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டே ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

 எனவே  இந்த சூழ்நிலையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *