
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியற் குழப்ப நிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற12 பேர் மன்னார் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.