கொழும்பு, மே 07
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அங்கு இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு விசேட பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
