யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் திடீரென உயிரிழப்பு 

யாழ்ப்பாணம் சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.

அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மதுபோதையில் குடும்பத் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *