
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெள்ளவத்தை ஹம்ப்டன் லேனில் இன்று சனிக்கிழமை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தை – ஹெம்டன் லேன் பகுதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து மக்கள் வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருளை பெற்றுக் கொள்ள வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் இவ்வாறு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக மேலும் தெரிவித்தார்.