எரிபொருள் விநியோகம் – வெளியானது புதிய அறிவிப்பு

தினமும் 4 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் 2 ஆயிரத்து 500 மெற்றி தொன் 92 ரக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திகள் மீள ஆரம்பிக்கப்படும் வரை வரையறுக்கப்பட்ட வகையில் இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை வந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் திங்கள் கிழமை இறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *