நாங்கள் வாழ்வதா? சாவதா? யாழில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போர் கொந்தளிப்பு 

இன்றைய தினம் இறைச்சி கடை முதலாளிகள் மற்றும் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவரும் தங்களின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படுகின்ற வாழ்வாதார பிரச்சனைகளை தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இறைச்சிக் கடைமுதலாளிகள் தெரிவிக்கையில்,

நான் 55 வருடகாலமாக இத்தொழிலினை செய்து வருகிறேன் .வியாபாரம் தற்போது மிகவும் குறைவு. கடைகளுக்கும், மக்களுக்கும் வியாபாரம் செய்து வருகிறேன்.வருகின்ற வருமானத்தைக்கொண்டு சீவிக்க முடியாத நிலையில் உள்ளேன்.பொருட்களின் விலை அதிகரிப்பதனால் வாழ்வாதாரதம் பற்றி சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் இலாபத்தினையே எதிர்பாக்க முடியாது. நட்டம் ஏற்பட்டாலும் அதனை அடுத்த நாளில் ஈடு செய்வதற்காக உழைக்க வேண்டும் .இவ்வாறாக எனது சீவியம் போகிறது.

நாம் அனைவரும் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட நிலையில் உள்ளோம். இதற்கான காரணம் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

இதனால் நாங்கள் கொள்வனவு செய்து கொண்டு வரவேண்டிய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

நுகர்வோருக்கு அந்தளவு பணம் தட்டுப்பாடாக இருப்பதால் வாங்குவதற்கு கடினமாக உள்ளது. ஆதலால் வியாபாரம் குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்தும் இந்த நிலை இருக்குமாயின் மிகவும் ஒரு நெருக்கடி நிலவும். தற்போது பணம் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.

இலங்கை பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பது தெ‌ரிகிறது. அரசு மாற்றம் வந்தால் மட்டுமே இதற்கொரு மாற்றம் வருமே தவிர இவ்வளவு காலங்கள் தாழ்த்தியும் ஒன்றுமே வரவில்லை .ஆனால் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்து செல்கிறது. நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம் என்றார் .

மேலும் கடைத்தொழிலாளி கூறுகையில் ;

24 ஆண்டுகளாக நன்றாக உழைத்தேன். ஆனால் தற்போது என்னை இந்த அரசாங்கம் பிச்சை எடுக்க வைத்து விட்டது . அரிசி,கோதுமை மா,சீனி என அனைத்துப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் இந்த மகிந்தராஜபக்ஷ ஆட்சியில் இருக்க கூடாது. கால் இல்லாத நிலையில் யாரோ ஒருவரிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுகிறேன் .நாங்கள் வாழ்கிறதா? சாகிறதா? என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *