‘சிறிகொத்தாவில் என்னை சந்திக்கலாம்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுக்கு ரணில் தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும் அங்கிருந்து கலைந்துசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *