
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை 13 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு இரத்ததானம் செய்யவுள்ளதாக தமிழர் அறிவியல் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் குறித்த படுகொலையின் நினைவேந்தல் 18.05.2022 நடைபெறும் அதேவேளை இரத்ததானமானது 20.05.2022 அன்று இடமென்றவுள்ளது.
2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாதத்தால் எம் இனத்தை அழித்தொளிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட மாபெரும் போரில் இரத்தம் சிந்தி உயிர்நீத்த எம் சொந்தங்களுக்காக இரத்தம் கொடுத்து அவர்களின் நினைவினை உயிர்ப்பிப்போம் என்ற தொனிப்பொருளில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.