அவசரகால நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி

கொழும்பு,மே 07

அவசரகால நிலைமையினை ஜனாதிபதி அவசரமாக பிரகடனபடுத்தியமைக்கான காரணத்தினை தாமதமின்றி அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டில்வின் சில்வா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, முடியுமென்றால் அவசரகால சட்டத்தினை நாடாளுமன்றில் 113 வாக்குகளுடன் நிறைவேற்றுமாறு ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *