மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை யாழுக்கு மாற்றுங்கள் – சுமந்திரன்

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை காரணமாக கைதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், உடனடியாக அவர்களை தமிழ் பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்டாலேயே விசாரணையை எதிர்கொள்வதுடன் அச்சமின்றி சாட்சியம் வழங்க கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கைவரும் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக இரத்துசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என்றும் சுமந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *