நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கெதிரான செயற்பாடாகுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
அத்தோடு உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தல் அதற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.
எனினும் அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.





