மொன்டானாவில் ரயில் தடம் புரள்வு : மூன்று பேர் உயிரிழப்பு 50 பேர் காயம்

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

சியாட்டல் மற்றும் சிகாகோ இடையே பயணிக்கும் ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரயிலில் ஏறக்குறைய 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்துக்கான விசாரணையை அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *