கண்ணீர்ப்புகைப் பிரயோகம் – மருத்துவ சங்கம் கண்டனம்!

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் சக குடிமக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

கண்ணீர்ப்புகையில் உள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறுகள், கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மோசமான நிலைமை குறித்து மிகவும் கவலையடைவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் இலங்கை மருத்துவ சங்கம் சுகாதார நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் பின்வரும் பரிந்துரைகளை வழங்கினர்:

அரசாங்கத்தின் அவசரநிலைப் பிரகடனம் குறித்து இலங்கை மருத்துவ சங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையானது மனிதனின் வன்முறை வடிவங்களைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலையை சீர்குலைக்க வழிவகுக்கும் மற்றும் அப்பாவி குடிமக்களின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும், இத்தகைய நிகழ்வு சீர்செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து, நமது அன்புக்குரிய தாய்நாட்டின் நலனுக்கான விரைவான தீர்வை நோக்கிச் செயல்படுமாறு இலங்கை மருத்துவ சங்கம் கேட்டுக்கொள்கிறது.- என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *