தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

வடக்கில் தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துத்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி, மலர் தூபி எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில், அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *