அவசரகால நிலை பிரகடனப்படுத்த காரணம் என்ன? முக்கிய சில தரப்பினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

<!–

அவசரகால நிலை பிரகடனப்படுத்த காரணம் என்ன? முக்கிய சில தரப்பினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு – Athavan News

தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான பின்னணியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *