இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டு 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை காரணமாக தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.