
அன்னையர் தினமான இன்று தனது பிள்ளைகள் தன்னுடன் இல்லை என தாயார் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனது மனக்கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று அன்னையர் தின நாளில் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் சந்தோஷமாக அன்னையர் தினத்தை கொண்டி வருகின்றனர்.
ஆனால், நான் கணவரை இழந்து பிள்ளைகளை இழந்து கண்ணீருடன் அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றேன். என் பிள்ளை இருந்தால் என்னை தூக்கி ஏந்திருப்பான். இந்த துன்பமான நிலையில் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்கிறேன்.
என்னைப் போல பல குடும்பங்கள் துன்பப்படுகிறார்கள், கண்விழித்து பாருங்க,ள் இன்றைய காலத்தில் சாப்பாடுக்கு மிகவும் கடினப்படுகின்றோம்.
தமிழர்கள் ஆகிய நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம் என உலக மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.- என்றார்.