
கொழும்பு,மே 08
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாளை பிரதமர் பதவிவிலகலாமென சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரத்தில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.