ஜனாதிபதி பதவி தொடர்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளது.

இதன்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்கிற நாட்டு மக்களின் பிரதானக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிக்க வேண்டுமென, இலங்கையின் இளம் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு எதிராக ஜனாதிபதி அடக்குமுறைகளை தொடர்ந்து பிரயோகித்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறிவருவதாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *