கிழக்கில் 148 தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கி வைப்பு!

மத்திய சுகாதார அமைச்சினால் புதிதாக நியமனம் வழங்கி வைக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களில் 148 பேர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சினால் இணைப்பு செய்யப்பட்ட 148 தாதிய உத்தியோகத்தர்களில் 45 பேர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும், 43 பேர் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும், 37 பேர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும், 23 பேர் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் இணைப்புச் செய்யப்பட்டு அவர்களுக்கான இணைப்புக் கடிதங்களை நேற்றயதினம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திவாகார சர்மா, நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவானி, சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி எஸ்.விஜயகுமார் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டு குறித்த இணைப்புக் கடிதங்களை வழங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *