கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மக்களுக்கான எரிபொருள் வழங்கும் விநியோகம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கண்டாவளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலும், தர்மபுரம் கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளையிலும் மக்களுக்கான எரிபொருள் குடும்பபங்கு அட்டைக்கு, மூன்று லிற்றர் வீதம் வழங்கப்படுவதாக கரைச்சி வடக்கு நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்
தொடர்ச்சியாக தமது கிளைகளை மண்ணெண்ணை விநியோகம் நடைபெற்று வருவதாகவும் மண்ணெணை பெற விரும்பும் மக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் தமது பகுதியிலுள்ள கிளை முகாமையாளரினை தொடர்பு கொள்ளுமாறு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

