‘அச்சம் தவிர்’ விழிப்புணர்வு செயற்றிட்டம்

கிளிநொச்சியில் ‘அச்சம் தவிர்’ எனும் தொனிப்பொருளில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

அபிசேக் பவுண்டேசனின் நிதிப்பங்களிப்புடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளனம்,  கிளிநொச்சி ஊடக மையம், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், பாசப்பறவைகள் அமைப்பு, திருவையாறு பிரண்ஸ் போரெவர் அமைப்புக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை  முன்னெடுத்துள்ளன.

இதன்போது முதல் கிடைக்கும் தடுப்பூசியை சிறந்த தடுப்பூசியாக கருதி செலுத்திக் கொள்ளுங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், முகக்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *