நாட்டை மீண்டும் ஒரு நகைச்சுவையாளரிடம் ஒப்படைக்க முடியாது – வஜிர அபேவர்தன

நாடு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மீண்டும் அதனை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அடுத்த ஆட்சியாளர் நகைச்சுவையாளராக இருக்கக்கூடாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த அரசுத் தலைமையை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட வேண்டும் தொலைநோக்கு மற்றும் சவாலை ஏற்றுக்கொண்டு அதை சமாளிப்பதற்கான திட்டம் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாடு வீழ்ச்சியடைந்து படுகுழியை உணர்ந்துள்ளது இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விரோதமாக இருந்தவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி திரண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாடு மேலும் மோசமான நிலையை நோக்கி செல்லும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *