
நாவின்ன – ஹைலெவல் வீதியில், எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஹைலெவல் வீதி, நாவின்ன சந்தி மற்றும் விஜேராம சந்தி ஆகிய பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாவின்ன பிரதேசத்தில் இன்று காலை முதல் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.