
கொழும்பு,மே 08
இலங்கைக்கு தெற்கே 630 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 07 வெளிநாட்டவர்களுடன் 240 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.