பந்துலவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பெற்ற சீ.ஐ.டியினர்!

பந்துலவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பெற்ற சீ.ஐ.டியினர்வர்த்தக அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அமைச்சரிடமிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.அதன்படி, லங்கா சதொசவில் இடம்பெற்ற வெள்ளைப் பூண்டு மோசடி குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அளித்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.மேலும், பந்துல குணவர்தன இந்த சம்பவம் குறித்து விசாரணை கோரி பொலிஸ்மா அதிபரிடம் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக சீ.ஐ.டி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *