
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்களால் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைக்க முற்பட்ட வேளை பெரும் பதற்றம் நிலவியதோடு கண்ணீர் புகைகுண்டு வீச்சு நீர்த் தாரைப் பிரயோகம் போன்றவற்றின் மூலம் ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.
இதேவேளை சிறிது நேரத்தில் மீண்டும் திரண்ட மாணவர்கள்அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் வீதிகளின் குறுக்கே வைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளில் உள்ளாடைகளை தொங்கவிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் அங்கு தொங்கவிடப்பட்ட உள்ளாடைகள் அகற்றப்பட்டதை தொடர்ந்துஇ இன்று பொலிஸ் தலைமையத்தில் உள்ளாடைகள் திருடப்பட்டதாக 20க்கும் அதிகமான வழக்குகள் தாக்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.